சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.074
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பண் - கொல்லி (பொது -நினைந்த திருநேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.074  
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்
பண் - கொல்லி (திருத்தலம் பொது -நினைந்த திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும் கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும் வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [1] |
முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும் இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள் அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [2] |
கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை, இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை, பெரும் பொருள் கிளவியானை, பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [3] |
செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம் செலுத்தி ஊர்மேல் கருத்தனை, கனகமேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா நிருத்தனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே! | [4] |
கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல் ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே! | [5] |
கருப் பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன், விருப்பனை, விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற நெருப்பனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே! | [6] |
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை, சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர் சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [7] |
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும் மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [8] |
விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை, கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை, எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [9] |
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள் குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்- அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! | [10] |