சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்
பண் - கொல்லி   (பொது -நினைந்த திருநேரிசை )
Audio: https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.074   முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்  
பண் - கொல்லி   (திருத்தலம் பொது -நினைந்த திருநேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும்
கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும்
வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[1]
முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும்
இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச
வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள்
அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[2]
கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை,
இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை,
பெரும் பொருள் கிளவியானை, பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[3]
செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம் செலுத்தி ஊர்மேல்
கருத்தனை, கனகமேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு
ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா
நிருத்தனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!

[4]
கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு
ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக
நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!

[5]
கருப் பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்,
விருப்பனை, விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும்
பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற
நெருப்பனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே!

[6]
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை,
சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர்
சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா
ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[7]
பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும்
மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த
குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[8]
விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை,
கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை,
எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட
அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[9]
உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர்
நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள்
குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்-
அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list